புதன், 16 அக்டோபர், 2013

ராஜா ராணி part 2 வராமல் தடுப்பது எப்படி? ஒரு காமெடி கலாட்டா 


              ராஜா ராணி ஒரு பிலோ ஆவரேஜ் படம் ஆனா இந்த விஜய் TV நம்ம கழுத்துல கத்தி வைக்காத குறையா பிரமோட் பண்ணி ஓடவச்சிட்டாங்க,போதாகுறைக்கு ஆரியா,நயன் கல்யாணம். ஜெய்,நஸ்ரியா லவ்வுன்னு கிளப்பிவிட்டு சூப்பர் ஹிட் ஆக்கிட்டாங்க.ஆனா படம் பாத்த நமக்குத்தான் தெரியும் அந்தப்படம் அவ்வளவு(ஜெய் போர்ஷன தவிர) ஒர்த் இல்லன்னு.சரி நடந்தது நடந்து போச்சு ஆனா இப்ப நம்ம கவலையெல்லாம் இந்தப்படம் ஹிட் ஆயிடுச்சி அதனால ராஜா ராணி பார்ட் 2 எடுக்கப்போறோம்னு இயக்குனர்  கிளம்பி வந்துடக்கூடாதுங்கிறது தான் அதுக்கு முன்னெச்செரிக்கையா  நாம என்ன தடுப்பு நடவடிக்கை எடுக்கலாம்ங்கிறது தான் இந்தப் பதிவின் நோக்கம்.



    1. கொஞ்சம் அழகான பொண்ணுங்க ரோட்ட,ரயில்வே டிராக்க பேக்கு மாதிரி கிராஸ் பண்ணாம சூதானமா கிராஸ் பண்ணுங்க.நீங்க அடிபட்டு போய் சேந்துடுவீங்க ஆனா இந்த சம்பவத்த பேப்பர்ல/மூஞ்சி புக்குல பாக்குற இயக்குனர் புதுசா ஒரு கதைய உருவாக்கி  ராஜா ராணி 2 ன்னு இட்லி சுட வாய்ப்பிருக்கு  சோ பொண்ணுங்க பொதுநலன் கருதி ரோட்ட/ரயில்வே டிராக்க கவனமா பழி,பாவத்துக்கு பயந்து கிராஸ் பண்ணுங்க.

2. இயக்குனர் ரிலாக்ஸா  இருந்தா தான் ராஜா ராணி 2 எடுக்கத்தோணும் அதனால அவர ரிலாக்ஸா இருக்க விடாம அவர நாம டார்ச்சர் பண்ணிட்டே இருக்கணும் அதாவது... என்ன எப்போதும் வாடா,போடான்னு கூப்பிட்டுட்டு இருந்த என் பொண்டாட்டி ராஜா ராணி பாத்தப்பிறகு என்ன பிரதர்ன்னு கூப்பிடுறா,கண்ணுல வேர்க்குது,மூக்குல அருவி கொட்டுது,காதுல தக்காளி சட்டினி வருதுன்னு பைத்தியம் பிடிச்ச மாதிரி பினாத்துறா, குடி பழக்கமே இல்லாத என்ன (????)பீர் வாங்கி கொடுத்து சாப்பிட சொல்றா  இதுக்கெல்லாம் அந்த இயக்குனர்தான் காரணம்னு அவர ஓரண்ட இழுக்கனும். முடிஞ்சா சொல்லுவதெல்லாம் உண்மை மாதிரியான நிகழ்ச்சிக்குஇயக்குனர கூப்பிட்டு வாங்கு வாங்குனு வாங்குனா  மனுசன் பார்ட் 2 ஐடியாவ கண்டிப்பா ட்ராப் பண்ணிடுவாரு.



3.புதுசா வர்ற இயக்குனர்களுக்கெல்லாம் மொத குறி மணி சார் படம் தான் ,நம்ம அண்ணாச்சியிலிருந்து தலைவா,ராஜா ராணி வரை கிட்டத்தட்ட ஒரு 100 படமாவது அவரோட பட கதை சாயல்ல வந்திருக்கும். இதுல அந்தப் படங்களை இயக்கின இயக்குனர்களை சொல்லியும் குத்தமில்லை ஏன்னா மணி சாரே அவரோட 'பகல்நிலவு' படத்த கொஞ்சம் பட்டி டிங்கரிங் பண்ணித்தான் 'நாயகனா' கொடுத்தாரு,அதே நாயகன கொஞ்சம் ஆல்ட்ரேஷன் பண்ணி 'தளபதி' கொடுத்தாரு so இப்ப நா என்ன சொல்ல வர்றேன்னா மணி சாரோட பகல் நிலவுல இருந்து அலைபாயுதே(அதுக்கு அப்புறம் வந்த கடல் வரைக்கும் டப்பா யாரும் சுட மாட்டாங்க) வரைக்குமான பட சாயல்ல யாரும் படமெடுக்கக்கூடது அப்படி மீறி படமெடுத்தா பட தயாரிப்பாளருக்கு ஸ்டேட் கவர்மென்ட் 10%ம் சென்ட்ரல் கவர்மென்ட் 10%ம் ( மணி சார் ஒரு தேசிய சொத்து) வரி விதிக்கணும் அப்படி வரி விதிச்சா ராஜா ராணி 2 எடுக்குற ஆசை யாருக்குமே வறாது.

4.பொதுவா இயக்குனர்களோட ரெண்டாவது படம் சொதப்பும் (இதுல ஷங்கர் மாதிரியான இயக்குனர்கள் விதிவிலக்கு) இந்த காரணத்த தயாரிப்பு காதுல கண்ணுல அடிக்கடி படுற மாதிரி செஞ்சி தயாரிபாளர பயமுறுத்தனா தயாரிப்பு தரப்பு கண்டிப்பா பின் வாங்கும்>

5.நய்யாண்டி தொப்புள் பிரச்சனைல நஷ்ரியாவ மூஞ்சி புத்தகம்/ட்விட்டர் வாழ் மக்களாகிய நாம் அட்டு பிகர் ,டொக்கு மூஞ்சின்னு கழுவி கழுவி ஊத்தி ஓரம் கட்டிவச்சிட்டோம்  அதுமாதிரி நயனையும் என்னமாவது எழுதி,பேசி அவங்கள நிஜமாவே கன்னியாஸ்திரி ஆக்கிட்டா வேற ஜோடி செட்டாகாதுன்னு படம் எடுக்க யோசிப்பாங்க 

6.இதையும் மீறி தயாரிப்பும்,இயக்குனரும் படமெடுக்க கிளம்பிட்டா, படமெடுத்து முடிக்கிற வரைக்கும் காத்திருக்காம அந்தக் கதை என்னோடது,அந்த இயக்குனர் வெளக்குற பேஸ்ட்டுல உப்பு இல்ல,தயாரிப்பாளர் போட்டிருக்கிற பட்டாப்பட்டி என்னுது அப்படின்னு ஏதாவது ஒரு கேஸ் அவங்க மேல போட்டுட்டா இது என்னாடா எழவு படம் ஆரம்பத்துலையே அபசகுனமான்னு அவங்க படத்த டிராப் பண்ண வாய்ப்பிருக்கு 

6.இத்தனையையும் மீறி அவங்க படத்த எடுத்துட்டா???? வேற வழி.... படத்த பாத்துட்டு இது சொட்ட அது சொட்டன்னு ஒரு ரிவ்யூ எழுதி நம்ம கடுப்ப தீத்துக்கவேண்டியது தான்.

         நாளைக்கு இதே மாதிரி ட்ராபிக் போலிஸ்ட்ட இருந்து பைன் கட்டாம தப்பிக்கிறது எப்படின்னு பாக்கலாம். பை பை....

நன்றி: எனது பதிவுகளை ஏற்றுக்கொண்ட தமிழ்மணத்திற்கு நன்றி.

கருத்துகள் இல்லை: