வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

காக்கிச்சட்டை - சினிமா

அநியாயத்துக்கு துணை போற இன்ஸ்பெக்டர்ட்ட ஒரு கான்ஸ்டபிள் பொங்குறார் அதுக்கு அந்த இன்ஸ் இதெல்லாம் துக்கடா கேசு  தொட்டா பத்திக்கிற மாதிரி ஒரு கேச கொண்டுவான்னு அப்ப நா யார்ன்னு காட்றேன்னு அப்போதைக்கு சமாதான படுத்தி அனுப்புறார்... ஆனா நிஜமாவே அந்த கான்ஸ் தொட்டா பத்திக்கிற மாதிரியான கேச கொண்டுவர்றார்... ஆனாக்க பாவம் அந்த தொட்டா பத்திக்கிற கேசுல அந்த இன்ஸ்சும் பத்தி எறிஞ்சி போயிடுறார் அதுக்கப்புறம் அந்த கான்ஸ் என்ன பன்னார் எப்படி அந்த கேச டீல் பண்ணார் அதனால் வந்த ஆபத்துகள எப்படி சமாளிச்சர்ங்கிறது தான் கதை....



 சிவ கார்த்திகேயன் ஆக்ஷன் ஹீரோவா பிரமோஷன்  ஆகியிருக்கார் வாழ்த்துகள்... ஆனா நிறைய எடத்துல விஜய்ய இமிட்டேட் பண்றார்... மிமிகிரி பண்றதுதான் காமெடின்னா அதுக்கு மயில்சாமி இருக்கார் ஹீரோ ஆயிட்ட நீங்க பழச மறக்க மாட்டேன்னு அடம்பிடிச்சா எப்படி சிவா சார்... ஸ்ரீ திவ்யா கொள்ளை அழகு...சின்னவீடு கல்பனா சுகர் வந்த மாதிரியே இருக்காங்க... சொலுங்கண்ணே சொல்லுங்க அண்ணாச்சிக்கு நிறைவான ரோல்...

                    செம திர்லிங்கா இன்ட்ரவல் பிளாக் வச்சிட்டு... அதுக்கேத்த மாதிரி பின் பாதிய கொண்டுபோகாம காமா,சோமான்னு படத்த கொண்டுபோய் முடிச்சிருக்காங்க.... 

ஒருக்கா பாக்கலாம். 

புதன், 25 பிப்ரவரி, 2015

Rajan Radhamanalan: ஊழ்வலி

Rajan Radhamanalan: ஊழ்வலி: சங்கமாங்குளத்தினுள் ஒரு கிளுவை மரத்தினடியில் குட்டியப்பனும் சகாக்களும் அமர்ந்து சீட்டாடிக்கொண்டிருந்தனர். உண்மையில் சீட்டுக்கள் எல்லாம் கே...

கைப்பிள்ளை

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

காதலர் தினம் - கார்டூன்


காதலர் தின வாழ்த்துகள் 


அனேகன் - சினிமா

வழக்கமா முன்ஜென்மம் சம்பந்தப்பட்ட  கதைகளில் ஒரு பேயோ பிசாசோ மறு ஜென்மத்துல அந்த வில்லன பழிவாங்கும்... ஆனா அனேகன்ல அப்படியில்ல டைரக்டர் தான்தன்ன நம்பி வந்த ஆடியன்ஸ்ச பலிவாங்குறார்...


                       ரெண்டு ஜென்மமா சாவுல முடியிற காதல் மூணாவது ஜென்மத்துல சுபமா முடியுது. மூணு ஜென்மத்தையும் ரெண்டுமணி நேரம் மாத்தி மாத்தி போட்டு அறச்சி,அறச்சி...நம்மள கடுப்பேத்தி கார்த்திக் தான் வில்லன்னு சொல்லி நிமிர வைக்கிற டைரக்டர் இதுவரைக்கும் கதாநாயகி கண்டதெல்லாம் முன்ஜென்மம் இல்ல  இல்யூஷன் தான்னு புதுசா முடிப்பார்ன்னு பார்த்தா... ஒரு யூஸ்வல் கிளைமேக்ஸ் வச்சி எழுந்து போங்கையான்னு நம்ம வெரட்டி விட்றார்...

படத்துல தனுஷுக்கு மூணு ரோல்,ஹீரோயினிக்கு மூனுரோல்,ஜெகனுக்கு ரெண்டு ரோல்,கார்த்திக் க்கு ரெண்டுரோல்,ஆஷிஷ் வித்யார்த்திக்கு ரெண்டுரோல்,மியூசிக் போட்டவருக்கு ஒரிஜினல்,எங்கேயோ கேட்டது மாதிரியிருக்கேன்னு ரெண்டு ரோல்..அப்புறம் இன்னொருவில்லனுக்கு ரெண்டு ரோல்... போதும் கன்ட்ரோல்,கன்ட்ரோல்...

  படத்துல பெரிய ஆறுதல் கார்த்திக்,மற்றும் டங்கா மாறி. டங்காமாறி எப்படி படம் பிடிச்சிருக்காங்கன்னு பாக்க முடியல தியேட்டர்ல பாதிக்கு மேற்பட்ட கூட்டம் ஸ்க்ரீன்ன மறச்சி ஆட்டம் போட்டதால முழுசா பாக்க முடியல...

படத்துல நிறைய ஓட்டைகள்... பல கோடிரூபாய் சொத்துக்கு ஓனரான ஹீரோயின ஏன்யா நாப்பதாயிரம் அம்பதாயிரம் சம்பளத்துக்கு வேலைக்கு அனுப்புறன்னு நம்ம சார்பா தனுஷ் கேள்வி கேட்டதுக்கே டைரக்டர் பதில் சொல்லல  நாம கேட்டா டைரக்டர் பதில் சொல்லப் போறார்

மற்றபடி இதை மாற்றானோட கம்பேர் பண்ணும்போது அனேகன் ஒரு படி கீழேதான்.. 

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015