வெள்ளி, 22 நவம்பர், 2013

இரண்டாம் உலகம் - விமர்சனம் 


                        இந்த பிரபஞ்சத்தில் நம் ஒருசூரியகுடும்பம் மட்டுமில்லை , இதுபோல் நிறைய சூரிய குடும்பங்கள் இருக்கின்றன,அங்கே நம்மைப்போன்ற உயிரினங்கள் இருக்கின்றன ஆனால் அங்கே காதல் இல்லை ( காதல் இல்லாமல் பின்ன எப்படி அம்புட்டு மக்கள் தொகை) அந்த காதலை இங்கேருந்து போற ஒருத்தர் அங்கே அறிமுகப்படுத்துறார் இதுதான் படத்தின் ஒன் லைன்.


 இந்த உலகத்துல தன் காதலிய இழந்த ஆரியா இரண்டாம் உலகத்துக்கு மங்கல்யான்ல.... ச்சே...பிரிமியர் பத்மினி கார்ல போய் இறங்கி அங்க காதல அறிமுகப்படுத்தி, எதிரும் புதிருமா  முட்டிட்டு திரியிற இன்னொரு ஆரியா அனுஷ்கா ஜோடிய சேத்து வைக்கிறதுதான் கதை, இதுக்கு அப்புறமும் டைரக்டர் விடுறதா இல்லை மூன்றாம் உலகத்து ஆரியா அனுஷ்காவையும் நமக்கு அறிமுகப்படுத்திட்டுத்தான் படத்த முடிக்கிறார்.... 



 இது ஆரியா காதலிக்கிறவங்க பொட்டுன்னு சாகுற சீசன் போல ராஜா ராணி நஸ்ரியா போல, இதுலயும் அனுஷ்கா பொட்டுன்னு போயிடுறாங்க (எனக்கு வந்த போன்கால் யாருதுன்னு மொபைல குனிஞ்சி பாத்து நிமிர்றதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிடுச்சி)

   ரெண்டு உலகத்துக்கதை, இதுல ரெண்டாம் உலகம் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு ரொம்ப மெனக்கெட்றுக்காங்க நிஜமாவே தமிழுக்கு இது ஒரு நல்ல முயற்சி.... ஆனாலும் என்னபண்ண  கதை சொதப்பிடுச்சே ரெண்டாம் உலகத்துக்கு போற ஆரியா  காதலர்கள  ஒன்னு சேக்குறதுக்கு என்ன பண்ணார்ன்னு யோசிச்சா ஒண்ணுமில்ல... காட்டுல இருக்கிற அனுஷ்காக்கு ரெண்டு மூணு தடவ டிப்பன்  கொண்டுபோய் கொடுக்கிறார் அம்புட்டுதான்

   மொத்தப் படமும் அனுஷ்காவ சுத்திதான் நகருது ஆனாலும் அனுஷ்காவ பத்தி சொல்றதுக்கும் ஒண்ணுமில்ல... 'ஜொள்'றதுக்கும் ஒண்ணுமில்ல நம் உலக அனுஷ்காவாவது பரவாயில்லை ,ரெண்டாம் உலக அனுஷ்காதான் பாவம் மேக்கப் இல்லாம நடிச்சிருக்கங்கன்னு நெனைக்கிறேன்... இப்படியே போனா ரிட்டையர் நடிகைகளுக்கு மறுவாழ்வு கொடுக்கும் ராமநாரயணன் சார் கூட அம்மணிய அம்மன் வேஷம் கட்ட கூப்பிட மாட்டரு.


        ஆரியா சுத்த வேஸ்ட்டு... அவர் வசனம் பேசும் போதெல்லாம் கடுப்பு கடுப்பா வருது.... பல இடங்கள்ல காதல் கொண்டேன் தனுஷ்ஷ ஞாபகபடுத்துறார், அப்புறம் அந்த இரண்டாம் உலக அம்மா (கடவுள்)கேரக்டர்... பல்லு விளக்காமலேயே நடிக்கவந்துடுச்சி போல.... வெள்ளைகாரங்க எல்லாம் தமிழ் பேசுறாங்க அப்படி அவர்கள் தமிழ்ல பேசும்போது தியேட்டரில் ஆங்காங்கே நமுட்டு சிரிப்பொலி... 

            பாடல்கள் இசை ஹாரிஸ்... கேக்ககேக்க பிடிக்குமோ என்னவோ? பின்னணி இசை அனிருத், நல்லா  இருந்தாலும்... பல இடங்களில் ஒரேமாதிரியான BGM, அதாலேயே  ஒருகட்டத்தில் லேசாக தலைவலி வர்றமாதிரி ஒரு உணர்வு. வசனம் எதுவும் மனசுல நிக்கல, செல்வா டச்ன்னு சொல்றதுக்கு ஒரு டாய்லட் சீன் இருக்கு.அப்புறம் இரண்டாம் உலகத்துக்கு வழி காட்டுற நாய் சீனையும் குறிப்பிட்டு சொல்லலாம்.

         இறுதியாக... எம்ஜிஆர்,நம்பியார் நடிச்ச கலையரசி படத்த அப்ப எல்லாரும் கிண்டல் பண்ணாங்களாம் ஆனா இப்ப அததான் தமிழின் முதல் விஞ்ஞான படமா குறிப்பிடுறாங்க... அதுபோல இந்தப்படமும் பின்னாளில் ஒரு வித்தியாசமான முயற்சியில் எடுக்கப்பட்ட முதல் பேண்டஸி படம் என்று குறிப்பிடப்படலாம்.

     
     

புதன், 6 நவம்பர், 2013

போலி டாக்டர் வர்றார் எல்லாரும் ஓடுங்க - ஜோக்ஸ்.




பேஷன்ட் : பயமா இருக்கு டாக்டர்... என்ன 'நம்பி' பொண்டாட்டி,ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க. 

டாக்டர் :  நான் ஒருத்தன் இருக்குறதயே மறந்துட்டீங்க....பாத்தீங்களா.

_______________________________________________________________________


போலி டாக்டர் : பாதி ஆபரேஷன்ல பேஷன்ட் வயித்துக்கு 'உள்ளே' எத வைக்கிறது எத 'வெளிய' எடுக்கிறதுன்னு குழப்பம் ஆயிடுச்சி. 

மற்றவர் : ஐயோ... அப்புறம்.


போலி டாக்டர் : 'உள்ள' போயிட்டு இப்பதான் ஜாமீன்ல 'வெளிய' வர்றேன்.
_______________________________________________________________________________
வந்தவர் : பெண் குழந்தைதான் வேணும்னு என் பொண்டாட்டி அடம் பிடிக்கிறா அப்படி பிறக்க எதுவும் மருந்து இருக்கா டாக்டர் ?

டாக்டர் : இருக்கே... டுவிட்டர்ல ஒரு அக்கௌன்ட் ஆரம்பிங்க போதும்.

_______________________________________________________________________



பேஷன்ட் : 'ஆபரேஷன்'னாலே எனக்கு அலர்ஜி டாக்டர்.


போலி டாக்டர் : எனக்குக்கூடத்தான்... ஆபரேஷனுக்கு  கத்திய எடுக்கும்போதே குமட்டும் ஆனாலும் அப்பப்ப எலுமிச்சம் பழத்த மோந்துபாத்து சமாளிச்சிப்பேன். 
______________________________________________________________________

சென்றாயன்  : சந்தோசத்துல பெரிய சந்தோசம் 'அடுத்தவன' சந்தோசப்படுத்தி பாக்குறதுதான்.

மற்றவன் : அதுக்காக 'அந்த அடுத்தவன்' பொண்டாட்டிய கூடிட்டு ஓடக்கூடாது மிஸ்டர் சென்றாயன்.
__________________________________________________________________________

சிங்: என்ன மிஸ்டர் PC இந்த வெங்காய விலை நம்ம அடுத்த எலக்ஷன்ல தல தூக்க விடாது போலயே.

ப.சி. : யூ டோன்ட் வொரி மிஸ்டர் P.M.... இந்த ஆஸ்பத்திரி செலவுகளுக்கு 80D டாக்ஸ் எக்ஸம்ஸன் கொடுக்கிறமாதிரி, 50000 ரூபாய் வரைக்கும் வெங்காயம் வாங்குன பில்லுக்கு 80 'O'  ( O for onion )டாக்ஸ் எக்ஸம்ஸன்ன்னு சொல்லி ஓட்ட அள்ளிடலாம்.
__________________________________________________________________________

ஒருத்தி : உம் புருஷன் தூக்கத்துல நடந்தே அடுத்த ஏரியாக்கு போயிடுறார்ன்னு வைத்தியம் பாத்தியே இப்ப முன்னேற்றம் தெரியுதா??

மற்றவள் : ஐயோ அந்த கொடுமைய என் கேக்குற.... காலையில திருப்பதில இருக்கேன்னு போன் பண்னார்.
_____________________________________________________________________

ஒருவர் : 'ஆறு'லயும் சாவு கிடையாது 'நூறு'லயும் சாவுகிடையாது

நண்பர் : யார் அது  ?

ஒருவர் : அந்த 'ஆறு''நூறு' எழுத்துகளுக்குத்தான், அதுல 'சா,வு.' ங்கிற எழுத்தே இல்ல பாருங்க.
_______________________________________________________________________

தொண்டர் : அந்த போலீஸ் ஸ்டேசன கார்ல கடக்கும் போதெல்லாம் தலைவர் கும்பிட்டுப்பார்.

தொண்டர் 2  : எதுக்காக அப்படி செய்றார்?

தொண்டர் 1 : முன்ன தினமும் கையெழுத்துப் போட்டு பழகின இடமாம்.
____________________________________________________________________


ஒருத்தி  : நா வாங்குற சம்பளத்துல முக்கால்வாசி புடவைஎடுக்கிறதுக்கே போயிடுது

இன்னொருத்தி  : அப்ப மீதி?

ஒருத்தி : அந்தப் புடவைங்களுக்கு ஓரம் அடிக்கிறதுக்கு போயிடுது.
________________________________________________________

ஆகவே நண்பர்களே ஜோக்ஸ் பிடிச்சிருந்தா,ட்விட்டர்,fb,g1,தமிழ் மனம் இதுல உங்களுக்கு எதுல அக்கௌன்ட் இருந்தாலும் மறக்காம பகிருங்க. உங்கள் கருத்துகளையும் பின்னூட்டமா எழுதுங்க ,அப்புறம் இதுக்கு முந்தய பதிவுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி,குறிப்பாக ஜோக்குகள் குடும்பமலர் தரத்துக்கு இருக்குன்னு வாரிய... ச்சே ... வாழ்த்திய அந்த நல்ல உள்ளத்துக்கும் நன்றி.
                                                                           இப்படிக்கு அன்புடன்

                                                                               பொ. முருகன்.





















திங்கள், 4 நவம்பர், 2013

சிரிங்க... சிரிகமுடியலைனா துப்பாதீங்க - நகைச்சுவை ஜோக்ஸ்.



1. பயணி : நான் தனியாதான் வந்திருக்கேன்  எனக்கெதுக்கு லக்கேஜ் போடுறீங்க 


நடத்துனர் : மனசுக்குள்ள சோகம் வண்டி வண்டியா இருக்குன்னு                                                     சொன்னீங்களே.....!!
----------------------------------------------------------------------------------------------------------







2. டாக்டர் : பேஷன்ட்டுக்கு  விறைவீக்க ஆபரேஷன் பண்ணும்னு                  சொன்னவுடனே பேய் முழி முழிச்சாரே அவரு பேஷன்ட்டுக்கு                      என்னவேணும்??

நர்ஸ் : புருஷனாம்...!!!!
-----------------------------------------------------------------------------------------------------------




3. நண்பர் : முறுக்குக்கு பேர் போன ஊர் எதுன்னு சொல்லு பாக்கலாம்?

   நண்பர் :  பேர் போன ஊர் எதுன்னு தெரியல, ஆனா பல்லு போன ஊரு மதுரை...  மாமியார் ஊரு!!
-------------------------------------------------------------------------------------------------


4. கணவர் : சீடைய கடிக்க முடியல ரொம்ப ஹார்டா இருக்கு ?உடைக்க ஏதாவது குடேன்?

    மனைவி : மைசூர் பாக் இருக்குல்ல  அதால உடச்சிக்குங்க?
--------------------------------------------------------------------------------------------------





5. நண்பன் : ஏன்டா கடேசில இப்படி'கவுத்து'ட்ட??

நண்பன் 2 : நீ தானே 'TITANIC'க்க சொன்ன....
------------------------------------------------------------------------------------------




6. ஒருவர் :  40 ல போனா வண்டி லிட்டருக்கு 70 கொடுக்கும்.50 ல போனா 60 கொடுக்கும்

    மற்றவர் : 100 ல போனா ?

    ஒருவர் : உங்களுக்கு திதி கொடுக்கணும்.
------------------------------------------------------------------------------------



7. டாக்டர் : நீங்க கண்டிப்பா தினமும் 5KM வாக்கிங் போகணும்.

  பைனாஸ் கம்பெனி நடத்துறவர்: 5 கிலோ மீட்டரா...?! 50 மீட்டர் மட்டும் வாக்கிங் போற மாதிரி இன்சால் மென்ட் ஸ்கீம் எதுவும் இல்லையா டாக்டர்.

-------------------------------------------------------------------------------------------





8. ஒருவர் :எவனும் பொண்டாட்டிக்கூட சண்டைபோட்டு சாமியாரா போனதா சரித்திரம் இல்லை...

 மற்றவர் : ஏன் அப்படி?

ஒருவர் : ஒரு பொண்டாட்டியையே சமாளிக்கமுடியாதவன் எப்படி............!!
------------------------------------------------------------------------------------------------------------



9. ஜட்ஜ் : ஏன் டைவேர்ஸ் கேக்கிறீங்க?

கணவன் : அலர்ஜியான எதையும் சேத்துக்கக் கூடாதுன்னு டாக்டர்
சொல்லிட்டாருங்க எசமான்!
---------------------------------------------------------------------------------------


10. ஒருவர் : பெண்கள் விடும் கண்ணீர் ரெண்டே வகைதானா எப்படி?

  மற்றவர் : கண்ணீர் கன்னம் வழியா போனா சீரியலுக்கு அழறாங்கன்னு அர்த்தம்,கண்ணீர் காதுக்கு போச்சின்னா சீரியஸா அழறாங்கன்னு அர்த்தம்.

-----------------------------------------------------------------------------------------

ஆகவே மக்களே படிச்சிட்டு நல்லா இருந்தா சிரிச்சிகிட்டே லிங்க பகிருங்க. நல்லா இல்லன்னாலும்.... துப்பிட்டு பகிருங்க!!

சனி, 2 நவம்பர், 2013

பாண்டியநாடு - சினிமா விமர்சனம் 


                   ரோட்ல போறவன் கன்னத்தில் ஒரு அறை விட்டா கோபப்படாம அறை இலவசமா கிடைச்சதுன்னு வாங்கிவர்ற சோதா தம்பி, வயசான அப்பா,கவெர்மென்ட் ஆபிசரா வேலை பார்க்கும் அண்ணன்  அண்ணி அம்மா கொண்ட குடும்பத்தில் அண்ணன் எதிரிகளால் கொல்லப்படு அது ஒரு விபத்துன்னு கேஸ் முடித்து வைக்கப்படுது.இதுல விரக்தியான வயசான அப்பா தன் குடும்பத்துக்கு தெரியாமஒரு பக்கம் அந்த வில்லன கொல்ல காய் நகர்த்துறார்,அது போல சோதா தம்பியும் குடும்பத்துக்கு தெரியாம வில்லன பழிவாங்க நேரம் பாத்து காத்துட்டு இருக்கார். வில்லனும் தன்ன கொல்ல சதி நடக்குதுன்னு தெரிஞ்சிக்கிட்டு அந்த வயசான அப்பாவ நெருங்குறார் இறுதியில் என்ன நடந்தது ?



            அதே நான் மாகன் அல்ல வகை  அறச்ச மாவுதான் இருந்தாலும் கொஞ்சம் வித்யாசம் காட்டியிருக்காங்க வழக்கமா  ஹீரோவுக்கு கொடுக்கிற பில்டப்ப இந்தப்படத்துல வில்லனுக்கு கொடுத்திருக்காங்க. ஹீரோ ஆக்ஷன் பிளாக் இடைவேளைக்கு பிறகுதான்.இடைவேளைக்கு முன்னாடி ஒருபக்கம் ஹீரோ லவ்வுல டெவலப் ஆகிறதையும்,இன்னொரு பக்கம் வில்லன் ஒரு அல்லக்கை அவரும்  கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகி சிட்டியையே தன் கைக்குள்ள வச்சிக்கிற தாதாவாகிறதையும் நல்லா காட்சி படுத்தியிருக்காங்க. அதுபோல தன் அண்ணன் செத்தப்பிறகு ஹீரோ கண் சிவக்க பஞ்ச் டயலாக் பேசிட்டு ஆக்ரோசமா கிளம்பல தன் பலம் உணர்ந்து வருஷக்கணக்கா(?) திட்டம் போடுறார்,இயல்பான ஆக்ரோஷத்தாலையே வில்லன்ட்ட இருந்து அப்பாவ காபாத்றார்,இயல்பான கோபத்தாலையே வில்லன் குரூப்ப கைமா பண்றார்.


 விஷால் ஹீரோ கம் தயாரிப்பாளர் இருந்தாலும் கடைசி வரைக்கும் எந்த பில்டப்பும் இல்லம இயல்பா வந்துட்டு போறார், சண்டைக்கோழிக்கு அப்புறம் விஷாலுக்கு இது ஒரு வெற்றிப்படம் .லக்ஷ்மி மேனன்  பாவம் அவர இன்னமும் ஒரு பிகரா இந்த உலகம் நம்புறது ஆச்சர்யம் அதுல பை பை ன்னு ஒரு கடுப்பு குத்தாட்டம் வேற. படத்துல விக்ராந்த் பத்து நிமிசமே வந்தாலும் மனசுல நிக்கிறார்,பாரதிராஜா தான் அப்பா... அப்பாஆஆ ஆ. விஷால் அண்ணனா வர்றவர் வில்லன்ட அடிவாங்கின அவமானத்துல முகத்த துடச்சிட்டு வர்ற ரியாக்ஷன் கிளாஸ்.அப்புறம் அந்த முட்டைக்கண் வில்லன் ( எதிர்நீச்சல் படத்துல மகளுக்காக உயிரையே விடுற பாசக்கார அப்பாவா நடிச்வர்ன்னு நினைக்கிறேன்)புதுசா இருக்கனுங்கிறதுக்காக போட்டிருக்காங்க போல. படத்துல சூரியும் இருக்கார்.

                                          மைனஸ்ன்னு பாத்தா இடைவேளைக்கு அப்புறம் விறுவிறுப்ப இன்னமும் கூட்டியிருக்கலாம்.விஷால் திட்டம் போடுறது,வில்லன நோட்டம் விடுறதுலையே முக்கால்வாசி நேரம் போயிடுது.வில்லன் என்னத்தான் பெரிய தாதாவா இருந்தாலும் நடுரோட்டுல மானாவாரியா எதிரிகளை சுட்டுத்தள்றது ரொம்ப ஓவர்.

                             ஆக மொத்தத்தில் இது அதகள படமென்றாலும் குடும்பத்தோடு போய் பார்க்கலாம்.