ஞாயிறு, 15 மார்ச், 2015

டிராபிக் ராமசாமியும் ராமஜெயம் கொலை வழக்கும்


கடேசியா மங்கள்யான் தந்த இன்பர்மேஷன் படி ராமஜெயத்த கொன்னது ஒரு தாத்தாதானாம் அதனால் தான் டிராபிக் ராமசாமிய விசாரணைக்காக பிடிச்சிவெச்சிருக்காங்களாம்.... ராமஜெயம் மாதிரி ஒரு உருவ பொம்மைய செஞ்சி நிறுத்திவெச்சி டிராபிக் கைல ஆயுதத்தை கொடுத்து டேய் உண்ண கொல்லாம விடமாட்டேன்டான்னு ஆவேசமா இந்தியன் பட ஸ்டைல்ல குத்தச் சொல்லி ஆயுதம் எவ்வளவு தூரம் பாஞ்சிருக்குன்னு கணக்கெடுக்கப் போறாங்களாம்...டிராபிக் ராமசாமிக்கு அடுத்து அன்னா ஹசாரேவையும் கூப்ட்டு விசாரிக்கிறதா உத்தேசமாம்... இந்த டெஸ்ட்ங்களால கலங்கிப் போயிருக்கிறது வயசானா நம்ம மதுரை ஆதினம் தானம் அவருக்கும் இந்தக்கொலைக்கும் எந்த சம்பந்தமில்லைன்னாலும் கன்னோட போலிஷ் வர்றது ஆகம விதிப்படி மடத்துக்கு நல்லதில்லையாம் அதனால எப்படியாவது சிவபெருமான் ஆட்சியாளர்கள் கனவுல வந்து நெத்திக்கண்ண காட்டி ஆதீனத்த விசாரிக்கக் கூடாதுன்னு உத்தரவிடுவார்ன்னு ரொம்ப நம்புறாராம்....இது தவிர 70 வயசுக்குமேல தமிழ்நாட்டு டீக் கடைகளில தீவிர அரசியல் பேசுற பெருசுகள ரகசியமா கணக்கெடுக்கிற வேலையும் தொடங்கியாச்சாம்.... # வரும் வாரம் வருவிருக்கும் ஜூனியர் விகடனுக்காக கழுகார் எழுதிவைத்த சுட்ட குறிப்புகளிலிருந்து.....