புதன், 6 நவம்பர், 2013

போலி டாக்டர் வர்றார் எல்லாரும் ஓடுங்க - ஜோக்ஸ்.




பேஷன்ட் : பயமா இருக்கு டாக்டர்... என்ன 'நம்பி' பொண்டாட்டி,ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க. 

டாக்டர் :  நான் ஒருத்தன் இருக்குறதயே மறந்துட்டீங்க....பாத்தீங்களா.

_______________________________________________________________________


போலி டாக்டர் : பாதி ஆபரேஷன்ல பேஷன்ட் வயித்துக்கு 'உள்ளே' எத வைக்கிறது எத 'வெளிய' எடுக்கிறதுன்னு குழப்பம் ஆயிடுச்சி. 

மற்றவர் : ஐயோ... அப்புறம்.


போலி டாக்டர் : 'உள்ள' போயிட்டு இப்பதான் ஜாமீன்ல 'வெளிய' வர்றேன்.
_______________________________________________________________________________
வந்தவர் : பெண் குழந்தைதான் வேணும்னு என் பொண்டாட்டி அடம் பிடிக்கிறா அப்படி பிறக்க எதுவும் மருந்து இருக்கா டாக்டர் ?

டாக்டர் : இருக்கே... டுவிட்டர்ல ஒரு அக்கௌன்ட் ஆரம்பிங்க போதும்.

_______________________________________________________________________



பேஷன்ட் : 'ஆபரேஷன்'னாலே எனக்கு அலர்ஜி டாக்டர்.


போலி டாக்டர் : எனக்குக்கூடத்தான்... ஆபரேஷனுக்கு  கத்திய எடுக்கும்போதே குமட்டும் ஆனாலும் அப்பப்ப எலுமிச்சம் பழத்த மோந்துபாத்து சமாளிச்சிப்பேன். 
______________________________________________________________________

சென்றாயன்  : சந்தோசத்துல பெரிய சந்தோசம் 'அடுத்தவன' சந்தோசப்படுத்தி பாக்குறதுதான்.

மற்றவன் : அதுக்காக 'அந்த அடுத்தவன்' பொண்டாட்டிய கூடிட்டு ஓடக்கூடாது மிஸ்டர் சென்றாயன்.
__________________________________________________________________________

சிங்: என்ன மிஸ்டர் PC இந்த வெங்காய விலை நம்ம அடுத்த எலக்ஷன்ல தல தூக்க விடாது போலயே.

ப.சி. : யூ டோன்ட் வொரி மிஸ்டர் P.M.... இந்த ஆஸ்பத்திரி செலவுகளுக்கு 80D டாக்ஸ் எக்ஸம்ஸன் கொடுக்கிறமாதிரி, 50000 ரூபாய் வரைக்கும் வெங்காயம் வாங்குன பில்லுக்கு 80 'O'  ( O for onion )டாக்ஸ் எக்ஸம்ஸன்ன்னு சொல்லி ஓட்ட அள்ளிடலாம்.
__________________________________________________________________________

ஒருத்தி : உம் புருஷன் தூக்கத்துல நடந்தே அடுத்த ஏரியாக்கு போயிடுறார்ன்னு வைத்தியம் பாத்தியே இப்ப முன்னேற்றம் தெரியுதா??

மற்றவள் : ஐயோ அந்த கொடுமைய என் கேக்குற.... காலையில திருப்பதில இருக்கேன்னு போன் பண்னார்.
_____________________________________________________________________

ஒருவர் : 'ஆறு'லயும் சாவு கிடையாது 'நூறு'லயும் சாவுகிடையாது

நண்பர் : யார் அது  ?

ஒருவர் : அந்த 'ஆறு''நூறு' எழுத்துகளுக்குத்தான், அதுல 'சா,வு.' ங்கிற எழுத்தே இல்ல பாருங்க.
_______________________________________________________________________

தொண்டர் : அந்த போலீஸ் ஸ்டேசன கார்ல கடக்கும் போதெல்லாம் தலைவர் கும்பிட்டுப்பார்.

தொண்டர் 2  : எதுக்காக அப்படி செய்றார்?

தொண்டர் 1 : முன்ன தினமும் கையெழுத்துப் போட்டு பழகின இடமாம்.
____________________________________________________________________


ஒருத்தி  : நா வாங்குற சம்பளத்துல முக்கால்வாசி புடவைஎடுக்கிறதுக்கே போயிடுது

இன்னொருத்தி  : அப்ப மீதி?

ஒருத்தி : அந்தப் புடவைங்களுக்கு ஓரம் அடிக்கிறதுக்கு போயிடுது.
________________________________________________________

ஆகவே நண்பர்களே ஜோக்ஸ் பிடிச்சிருந்தா,ட்விட்டர்,fb,g1,தமிழ் மனம் இதுல உங்களுக்கு எதுல அக்கௌன்ட் இருந்தாலும் மறக்காம பகிருங்க. உங்கள் கருத்துகளையும் பின்னூட்டமா எழுதுங்க ,அப்புறம் இதுக்கு முந்தய பதிவுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி,குறிப்பாக ஜோக்குகள் குடும்பமலர் தரத்துக்கு இருக்குன்னு வாரிய... ச்சே ... வாழ்த்திய அந்த நல்ல உள்ளத்துக்கும் நன்றி.
                                                                           இப்படிக்கு அன்புடன்

                                                                               பொ. முருகன்.





















கருத்துகள் இல்லை: