திங்கள், 22 டிசம்பர், 2014

உயர்ந்த மனிதரும் தேசிய கட்சி தலைவரும்

       ஒரு உயர்ந்த மனிதர் ஒரு தேசிய கட்சில ஐகிய மாயிருக்காரு அப்படி ஐய்கியமான உயர்ந்த மனிதர்ட்ட அந்த கட்சி தலைவர் ரெண்டு வார்த்த பேசலாம்னு பேச்சு கொடுத்திருக்காரு..
கட்சித்தலைவர் : வணக்கம்
உயர்ந்த மனிதர் : வணக்கம்
க.தலைவர் : நீங்க ஏன் பழைய கட்சிலருந்து இங்க வந்தீங்க...
உயர்ந்த மனிதர்: அந்த கட்சில ஜனநாயகம் இல்ல ..
க.தலைவர் : அப்படியா...!
உயர்ந்த மனிதர் : ஆமா அந்த கட்சில என்ன தவிர வேற யாருக்கும் கிழக்கு சிவக்கையிலே பாட்டு தெரியல
க.தலைவர் : சரி அத விடுங்க உங்கள பத்தி சொல்லுங்க...
உயர்ந்த மனிதர் : கிழக்கு சிவக்கயிலே..
க.தலைவர் : ஓ... பாட்டாவே பாடிட்டீங்களா...?பேஷ் பேஷ் கண்டின்யு
உயர்ந்த மனிதர் : .நா கீர அறுக்கையிலே...
க.தலைவர் : ஓ.. நீங்களும் என்ன மாதிரி தவர பட்சிணியா...? நா கூட உங்க உயர்த்த பாத்து மாமிச பட்சணின்னு தப்பா கணக்கு போட்டுட்டேன்
உயர்ந்த மனிதர் :நா உன்ன நெனைக்கையிலே...
க.தலைவர் அடடடா... என் மேல அவ்வளவு பாசமா...? கண்டினியூ... கண்டினியூ
உயர்ந்த மனிதர் : பல் அருவா பட்டுடிச்சே...
க.தலைவர் : ஓ...நோ... கொஞ்சம் சூதானமா இருந்திருக்க கூடாதா... சரி சரி உங்கள பத்தி இன்னும் சொல்லயே...!?
உயர்ந்த மனிதர்: கிழக்கு சிவக்கயிலே...
க.தலைவர் : மறுபடியுமா...?
உயர்ந்த மனிதர் : நா கீர அறுக்கையிலே...
க.தலைவர் : பேஷ் பேஷ்..
உயர்ந்த மனிதர் : நா உன்ன நெனைக்கையிலே...
க.தலைவர் : ஆஹா...
உயர்ந்த மனிதர் : பல் அருவா பட்டுடுச்சே..
க.தலைவர் : சரி போதும் உங்கள பத்தி சொல்ல ஆரம்பிங்க...
உயர்ந்த மனிதர்: கிழக்கு சிவக்கயிலே..
க.தலைவர் :................
உயர்ந்த மனிதர் : நா கீர அறுக்கையிலே....
க.தலைவர் :.......................
உயர்ந்த மனிதர்: நா உன்ன நெனைக்கையிலே...
க.தலைவர் : .............
உயர்ந்த மனிதர் : பல் அருவா பட்டுடுச்சே.....
:உயர்ந்த மனிதர் சார்... சார்... எங்க ஓடுறீங்க...நீங்க என்ன பத்தி திரும்ப திரும்ப கேடிங்க... நானும் என்ன பத்தி திரும்ப திரும்ப சொன்னேன் அதுக்காக ஓடுனா எப்படி....
க.தலைவர் : அய்யா சாமி...ஒத்த பாட்ட மட்டும் மனப்பாடம் பண்ணி வச்சிட்டுதான் அரசியல்ல மந்திரிவரைக்கும் வந்தீயாய்யா... என்ன உட்ரூ எட்டு பட்டி ராசா..

டிஸ்கி : இது நகைச்சுவை பதிவு மட்டுமே...

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

HA HA HAA!!!