ஞாயிறு, 21 டிசம்பர், 2014

லிங்காவும் இணயமும்....

          லிங்காவும் இணயமும் 


         மனிதனில் கண்ணா இப்புடுச்சூடு என பறந்து பறந்து அடித்ததை ரசித்தோம் அதே படத்தில் கண்ணிவெடிகளை கேட்ச் பிடித்து அந்தவெடிகளை போட்டவர்கள் மீதே திருப்பி வீசியதை விசிலடித்து ரசித்தோம்...
               அதிசயபிறவியில் மணல் மூட்டைகளை ஒத்தை கையில் தூக்கி விசிறியடித்ததை ரசித்தோம்
                  
             ராஜாதிராஜாவில் கத்தியை சுத்திவிட்டதை ரசித்தோம் 

            முத்துவில் ஒரு மலைமுகட்டிலிருந்து மறு மலை முகட்டுக்கு சாரட்டோடு தாவியதை ரசித்தோம்...
            
             இவ்வளவு ஏன் படையப்பாவில். சுமார் இருபதுவருடங்களுக்கு பிறகும் மாடு அதே இளமையுடன் முட்ட ஓடிவருவதை விசிலடித்து ரசித்தோம்...
        
     இவ்வளவயும்  ரசித்த நம்மால் ஏன் லிங்கா இறுதிக்கட்ட காட்சிகளை ரசிக்க முடியவில்லை... ஏனென்றால் அப்போதெல்லாம் இணயம் நமக்கு பரிட்சயமில்லை... அதனால் படங்களை ரசிக்கமுடிந்தது ஆனால் நாம் இப்போது இணயத்துக்கு அடிமைப்பட்டு நம் சுய ரசிப்புத் தன்மையை இழந்துவிட்டோம் ஒரு படம் வெளிவந்த ஒரு மணி நேரத்துக்குள்ளேயே நூறு விமர்சனங்கள் இணயத்தில் வெளிவருகின்றன  அந்த விமர்சணங்களையெல்லாம் நாம் உள் வாங்கிதான் படத்துக்கு போகிறோம் அப்படி படம் பார்க்கும் போது விமர்சனங்களில் அப்படி சொன்னார்களே இப்படி சொன்னார்களே என்று நமது தனிப்பட்ட ரசிக்கும் திறனை கொன்றுவிட்டுத்தான் படத்தை பார்க்கிறோம்         

                               இணயத்தில் அடுத்தவனின் குறைகளை மட்டுமே பட்டியலிட கற்றுக்கொண்டுவிட்டோம்... படத்தின் பின்னணியில் இருக்கும் ஆறுமாத கடும் உழைப்பை மறந்துவிடுகிறோம் ரஜினி படங்களில் நாம் தூக்கிக்கொண்டாடும் பாட்ஷா அண்ணாமலை இப்போது ரிலீஸாகியிருந்தால் கண்டிப்பாக கழுவி கழுவி ஊற்றியிருப்போம்.. 'கற்றுக்கொண்ட வித்தை'யை வைத்தே ஒரு மனிதனை இரண்டுமாதங்கள் இணையத்தில் சுத்த விட்டு அடித்தவர்கள் தானே நாம்...

            இத்தனையையும் நான் ஏன் சொல்கிறேன் என்றால் எனக்கும் லிங்கா பிடிக்கவில்லை... ஏனென்றால் நானும் ஒரு இணய அடிமைத்தானே...!

கருத்துகள் இல்லை: