கதைக்காக டைரக்டர் ரொம்ப சிரமப்படல... படம் ஆரம்பிச்ச அஞ்சு நிமிசத்துலையே விஷால்,ஹன்சிகா,சந்தானம் எல்லாரும் ஆஜர் ஆயிடுறாங்க... கதை மட்டும் இடைவேளைக்கு கொஞ்சம் முன்னாடி வந்து சேந்துக்குது... அதுவும் 80% கதையை சம்பந்தப்பட்ட நடிகர்களே தன் வாயாலேயே சொல்லிடுறாங்க... மீதி 20% டதான் நாம விஷுவல பாக்குறோம்...படத்துல டுவிஸ்ட்ன்னு குறிப்பிட்டு சொலனும்னா விஷால் வைபவ் தான் தன் தம்பின்னு கண்டுபிடிக்கிற டுவிஸ்ட் இருக்கே.... வாறே வாவ்...கைய கொடுங்க சுந்தர் சி.சார்... சான்சே இல்லை...
படத்துல நம்மை சற்றாவது ஆறுதல் படுத்துபவர்கள்... சந்தானமும்... கனல் கண்ணனும் மட்டும் தான்... மற்றவர்கள் படுத்துகின்றனர்... கிளைமேக்ஷில் கனல் கண்ணன் ஒரு பாட்டில் தண்ணிக்கா இம்புட்டு அக்கப்போரு என புலம்புவது செம காமெடி கலாட்டா...
விஷால்,பிரபு,துளசி,ஹன்சிகா,ரம்யாகிருஷ்ணன்,கிரண்,ஐஸ்வர்யா,என ஏகப்பட்ட நட்சத்திரங்கள கூட்டிட்டு போன சுந்தர் சி.ஒரு தையல் காரரையும் கூட கூட்டிட்டு போயிருந்திருக்கலாம்... பாவம் ஹன்சிகா படம் ஓப்னிங்லருந்து...எண்டு கார்டு போடுற வரைக்கும் தொடைவரைக்கும் கிழிஞ்ச பாவாடைகளையே போட்டுட்டு வர்றாங்க...
அப்புறம் படத்த பத்தி பாசிட்டிவா சொல்லனும்னா.. படம் மூணேகால் மணி நேரம் இழுக்காம... ரெண்டேகால் மணி நேரத்துலையே முடிஞ்சுடுது... நாலு பாட்டு இருக்கு ரிலாக்ஸா கேண்டின் போய் வரலாம்...
மொத்தத்தில் படத்த ரசிக்கிறதும் ரசிகாததும் உங்கப்பாடு... நான் இப்ப போயிட்டு அப்பாலிக்கா வர்றேன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக